அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்தின் முடிவில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுரபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விக்டர், முக்குளம் சார்பு ஆய்வாளர் கனராஜ், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன், பசுமைப் படை பொறுப்பாளர் சரவணக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.