விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி இன்று தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க மிதிவண்டி பேரணி இன்று தொடங்கி 3 நாள்கள் நடக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க மிதிவண்டி பேரணி இன்று தொடங்கி 3 நாள்கள் நடக்கிறது.
தமிழகத்தில் 4 ஆம் கட்டமாக விருநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக. 31) முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இப்பேரணி நடக்கிறது.
இதையொட்டி சாத்தூரில் வெள்ளிக்கிழமை (ஆக.31) ஹரி மஹாலில் தொடங்கி சாத்தூர், அமீர்பாளையம், பிரதான சாலை, வெம்பக்கோட்டை சாலை, ஒ.மேட்டுபட்டி, ஒத்தையால், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், சத்திரபட்டி வழியாக இரவு ராஜபாளையம் சென்றடைகிறது. சனிக்கிழமை (செப்.1) ராஜபாளையத்திலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சிவகாசி சென்றடைகிறது. ஞாயிற்றுகிழமை (செப்.2) சிவகாசியிலிருந்து, விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக காரியாபட்டியில் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர். இதில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.