மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு
ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே உள்ள பட்டியூரைச் சேர்ந்தவர் சீனிராஜ். இவரது மகன் ராம்குமார் (19). இவர் வியாழக்கிழமை வீட்டில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க மின் மோட்டார் "சுவிட்சை' போட்டுள்ளார். அப்போது அதில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.