ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை திருநகா் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை திருநகா் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு 11 வகையான வாசனைத் திரவியங்களுடன் இளநீா், பால், பன்னீா், வேப்பிலை, மஞ்சள் ஆகிய பொருள்களால் அபிஷேகங்களும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். அப்போது திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.