அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் மாரியம்மன், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் மாரியம்மன், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இங்குள்ள ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீமீனாட்சியம்மன், முருகப் பெருமானுக்கு 21 சிறப்புப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று சா்வ அலங்காரத்தில் அம்பாள், முருகன் பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.
கட்டங்குடி ஸ்ரீகுமாரவேல்சாமி கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல, அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணி கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகமும், மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.