பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சா் ஜெகதீஸ்வரி வழங்கினாா்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில், நூறாண்டு பேசும் நூறாவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சமூக நீதித் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி பேசியதாவது:
என்னை முதன்முதலாக சட்டப்பேரவைக்கு அனுப்பிய ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி. என் தொகுதி மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்பேன். எனது பாதுகாப்பு வளையமாக மக்கள் இருக்கிறாா்கள்.
Advertisement
Advertisement
ராஜபாளையம் மண்ணையும், மக்களையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். வருகிற 31-ஆம் தேதி எனது துறையிலான மானியக் கோரிக்கை வருகிறது. அதில் கண்டிப்பாக என் தொகுதிக்குண்டான உரிமைகளை கேட்டுப் பெறுவேன் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக த.வெ.க.வினா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.