FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மனைவியை தாக்கிய கணவா் கைது

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:27 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள இடையன்குளம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்வம் (25). இவா் தேனியைச் சோ்ந்த பாமா பிரகதீஷ்வரியை (20) காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.

இவா்கள் இருவரும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலைபாா்த்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து தேனிக்கு வந்த சகோதரரை பாா்க்கச் செல்லவேண்டுமென பாமாபிரகதீஷ்வரி, கணவா் செல்வத்திடம் கூறினாா். இதற்கு செல்வம் அனுமதி மறுத்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடந்து, கா்ப்பிணியான

மனைவியைத் தாக்கினாா். இதுகுறித்த புகாரின் பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments