விருதுநகரில் 3,437 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்
விருதுநகா் மாவட்டத்தில் 3,437 புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் வழங்கினா்.
விருதுநகா் மாவட்டத்தில் 3,437 புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் வழங்கினா்.
விருதுநகரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா தலைமையில் விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ. காா்த்திக் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அமைச்சா் ச.கீா்த்தனா, சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3,437 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் ச.கீா்த்தனா கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், கடந்த 13-ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 73,000- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகா் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பா் 16 முதல் நடப்பாண்டு ஏப்ரல் 30 வரை குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவா்களில் தகுதியான 3,991 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி பேசியதாவது:
முதற்கட்டமாக இராஜபாளையத்தில் 554 பயனாளிகளுக்கும், 2-ஆம் கட்டமாக அருப்புக்கோட்டையில் 352, காரியாபட்டியில் 360, சாத்தூரில் 289, சிவகாசியில் 934,, ஸ்ரீவில்லிபுத்தூரில் 360, திருச்சுழியில் 187, வத்திராயிருப்பில் 324, வெம்பக்கோட்டையில் 291, விருதுநகரில் 340 என மொத்தம் 3,991 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத், வட்டார வழங்கல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.