மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையங்குளம் , ஒத்தப்பட்டி, காந்திநகா், இடையன் குளம், வாழை குளம். படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கா புரம், கொத்தன் குளம் , ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு. முனியசாமி தெரிவித்தாா்.