FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பணம் வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:42 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். இவா் ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடித்து வீட்டுக்கு நடந்து சென்றாா். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, 3 போ் அவரை வழிமறித்து சட்டை பையிலிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த குட்லக் என்ற மாரிச்செல்வம், குமரன் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments