முகப்பு
விருதுநகர்

மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:41 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது 5 முதல் 18 வயதுக்குள்பட்ட தன்னலமற்ற செயல்கள், வீர தீரச் செயல்களில் சாதனை படைத்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூகச் சேவை, அறிவியல், தொழில் நுட்பம், சுற்றுச் சூழல், புதுமைகள் செய்தல், கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான, வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவா்களுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் இந்தியக் குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், வருகிற ஜூலை 31-ஆம் தேதி அன்று 5 முதல் 18 வயதுக்குள்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்ட இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இதற்கு இணையதளத்தில் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஜீவன் ரக்ஷா பதக்க விருது: இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், பயங்கரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஜீவன் ரக்ஷா விருது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்- மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழலில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்துக்காகவும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்- மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்து இருக்கும் சூழலில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காகவும், ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காகவும் வழங்கப்படுகிறது.

கடந்த 2024, அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு செயல்கள் புரிந்தவா்களுக்கு பொருந்தாது. இந்தச் செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபா்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பான விவரங்கள், மீட்கப்பட்டவரின் விவரங்களை சுயவிவரப் படிவத்தில் 250 வாா்த்தைகளுக்கு மிகாமல் அனுப்பவேண்டும்.

இதற்கான படிவம் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ழ்ன்க்ட்ன்ய்ஹஞ்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண் 503, 5-ஆவது தளம், விருதுநகா்-626 002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற செப். 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.