அனுமதியின்றி மணல் கொண்டுவர பயன்படுத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது
மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டுவர பயன்படுத்திய லாரியை, போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டுவர பயன்படுத்திய லாரியை, போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மணல்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மற்றும் போலீஸார் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்ட லாரியில் சோதனையிட்டதில் அந்த லாரியில் அனுமதியின்றி 2 யூனிட் மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரியை மணலுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சீர்காழி பகுதியைச் சேர்ந்த திருவிநாயகம் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.