நாகப்பட்டினம்

சீர்காழி அருகே இளைஞர் தற்கொலை: மனைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

DIN

சீர்காழி: சீர்காழி அருகே பெரம்பூர் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி அற்புதராஜ் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அற்புதராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனை அறிந்த அவரது மனைவி மணியரசி அவரை மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு  மருத்துவ கல்லூரியில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அற்புதராஜ் உயிரிழந்தார். 

இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்றுவந்து இன்று காலை பெரம்பூர் இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைத்துள்ள நிலையில், அவரது இறப்புக்கு மனைவி மணியரசி மற்றும் மாமியாரே காரணம் என குற்றம் சாட்டி இருவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நடவடிக்கை எடுக்கும்வரை உடலை நல்லடக்கம் செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT