தந்தை- மகள் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சின்னக்கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜெயராஜ் (43). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன், விஷ்வா, விக்ரம் மற்றும் ராகவன் ஆகிய 4 பேரும் நின்றுகொண்டு, தகாத வார்த்தைகளால் எட்வர்ட் ஜெயராஜை திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கேட்டபோது எட்வர்ட் ஜெயராஜையும், அவரது 14 வயது மகளையும் அக்கும்பல் தாக்கியதாகத் தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், மேற்கண்ட 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.