FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தந்தை- மகள் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சின்னக்கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜெயராஜ் (43). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன், விஷ்வா, விக்ரம் மற்றும் ராகவன் ஆகிய 4 பேரும் நின்றுகொண்டு, தகாத வார்த்தைகளால் எட்வர்ட் ஜெயராஜை திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கேட்டபோது எட்வர்ட் ஜெயராஜையும், அவரது 14 வயது மகளையும் அக்கும்பல் தாக்கியதாகத் தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், மேற்கண்ட 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments