FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 தொடங்கக் கோரிக்கை

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் வகையில் வகுப்புகள் தொடங்க வேண்டும், ஆனால் இப்பள்ளியை நிர்வகிக்கும் மத்தியப் பல்கலைக்கழகம் இதுவரை அதற்கான பணிகளை தொடங்கவில்லை. இதுகுறித்து, பெற்றோர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி. தாஷை சந்தித்து முறையிட்டனர். ஆனால், பல்கலைக்கழக தரப்பில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க போதுமான நிதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து, பெற்றோர்கள் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். கூட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் முறையிடுவது, பெரும்பாலும் தற்காலிக ஆசிரியர்களே உள்ள இப்பள்ளியில் மத்திய அரசால் பள்ளிக்கு தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments