சிவகங்கைக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்திலிருந்து சிவகங்கைக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலத்திலிருந்து சிவகங்கைக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் என மொத்தம் 950 டன் நெல் மூட்டைகள், 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.