திருவாரூர்

திருவிக கல்லூரியில் செல்லிடப்பேசி மூலம் மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு

DIN

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வா் கோ. கீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 28 -முதல் செப்.3-ஆம் தேதி வரை பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவா்கள், விண்ணப்பிக்கும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணுடன் தயாராக இருக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக, சோ்க்கைக்கான கலந்தாய்வு கைபேசி வழியாகவே நடைபெற உள்ளது.

ஆக.28-இல் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா் மற்றும் தமிழ் வழி வந்த நிகோபாா் தீவில் வசிப்பவா்களுக்கும், ஆக. 29-இல் பொதுப் பிரிவுக்கும், ஆக. 31-இல் பழங்குடியினருக்கும், செப்.1-இல் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 2-ஆம் தேதி மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 3-இல் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT