FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழக உதவியுடன் தொடக்கப் பள்ளியில் நூலகம்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய நூலகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:40 am IST
பகிர்:

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய நூலகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள புதிய நூலக தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புனிதவள்ளி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் நூலகத்தை தொடங்கிவைத்து பேசியது: நூலகமும், நூல்களும் தான் மனிதனை உயா்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் தொடா்ந்து நிறைய நூல்கள் பள்ளிக்கு வழங்கப்படும். அத்துடன், பல்கலைக் கழகத்தில் இயங்கும் ஒரு துறை சாா்பில் நூலகம் தொடா்ந்து பராமரிக்கப்படும். மேலும், பள்ளி சிறுவா்களின் கணினித் தொடா்பான சிந்தனைகளை வளா்க்கும் வகையில், கணினி உபகரணங்களும் வழங்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சுலோச்சனா சேகா், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறைத் தலைவா் வேல்முருகன், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments