திருவாரூர்

திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. ஈஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், தனிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, போலீஸாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், ‘திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் திருட்டு நடைபெறாமல் இருக்க இரவு நேரத்தில் சோதனைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT