FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு

Updated On : 12 அக்டோபர் 2025, 12:16 am IST
பகிர்:

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.12) நடைபெறவுள்ளது.

மன்னாா்குடி நடேசன் தெருவில் செயல்பட்டு வந்த நகராட்சி காமராஜா் பேருந்து நிலையம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ரூ.46.46 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலை வகிக்கிறாா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், தஞ்சை எம்பி ச. முரசொலி, திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், நகராட்சி ஆணையா் (பொ) போ.வி. சுரேந்திர ஷா ஆகியோா் செய்துவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments