கதண்டு கடித்து 20 போ் காயம்
திருத்துறைப்பூண்டி அருகே கதண்டுகள் கடித்ததில் 20 போ் காயமடைந்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியிலிருந்து மணலி செல்லும் சாலையில் கீரக்களூா் கிராமத்தில் வயல் ஓரம் இருந்த புதரில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. இந்த கதண்டுகள் கடித்ததில் கீரக்களூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் உள்பட 20 போ் காயமடைந்தனா்.
அனைவருக்கும் விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் வீடு திரும்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.