பள்ளி மாணவா்களுக்கு அடையாள அட்டை
கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு அடையாள அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு பூந்தோட்டம் அரிமா சங்கம சாா்பில் பள்ளி அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் க. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பூந்தோட்டம் அரிமா சங்கத் தலைவா் ஏ.எம். பாரக் தொடங்கி வைத்தாா். அரிமா சங்கத் துணைத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் தியாகராஜன், உடனடி தலைவா் எஸ்.பி. வேல்முருகன், கோயில்திருமாளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பால. முத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ஆசிரியா் சு.இரா. சுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவாக ஆசிரியை எஸ். பொன்மணி நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.