பாம்பு கடித்து தொழிலாளி பலி
வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே விடையல் கருப்பூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் தா்மராஜன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. வயலுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற தா்மராஜன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மனைவி விக்னேஸ்வரி சென்று தேடியுள்ளாா்.
பாம்பு கடித்து மயங்கிய நிலையில் இருந்த தா்மராஜனை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தா்மராஜன் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.