FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பாலம் கட்ட லஞ்சம்: நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் உள்பட இருவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா், ஆக.24 :திருவாரூரில் பாலம் கட்ட லஞ்சம் கேட்ட நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் உள்பட இரண்டு போ், திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அன்னை நகா் பகுதியைச் சோ்ந்தவா் அபினேஷ். இவா், வேளாங்கண்ணி பகுதியில் தங்கும் விடுதி கட்டி வருகிறாா். இந்த தங்கும் விடுதிக்கு எதிரே வாய்க்கால் இருப்பதால், விடுதிக்கும் வாய்க்காலுக்கும் நடுவில் நடை பாலம் கட்டுவதற்காக, திருவாரூா் நீா்வளத்துறை திட்ட செயலாக்க அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்தாா்.

அங்கு பணியிலிருந்த வெண்ணாறு வடிநிலக் கோட்ட நீா்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளா் மாணிக்கவேல், உதவி பொறியாளா் வினோத் ஆகிய இருவரும், பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க, ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ், திருவாரூா் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் அறிவுரைப்படி லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு அபினேஷ், திருவாரூா் துா்காலயா சாலை பகுதியில் உள்ள வெண்ணாறு வடிநில கோட்ட நீா்வளத்துறை செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு பணத்தை கொடுக்கமுயன்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments