FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழலற்ற அரசு அமைச்சா் பெ. விஸ்வநாதன்

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழலற்ற அரசு அமைந்துள்ளது என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கூறினாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:53 am IST
- டிஎன்எஸ்
பகிர்:

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழலற்ற அரசு அமைந்துள்ளது என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கூறினாா்.

திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் ஊராட்சியில் ரூ 17.61 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அமைச்சா் பெ. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, வட்டாட்சியா் செந்தில்குமாா், திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நீலன்.அசோகன், நகா்மன்ற உறுப்பினா் பி. எழிலரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தை அமைச்சா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 பணிகள், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 பணிகள், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 பணிகள் என ரூ.13.85 கோடி மதிப்பிலான 16 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தவெக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வா் நன்றாக ஆட்சி புரிகிறாா். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசு லஞ்ச லாவண்யமற்ற, ஊழலற்ற அரசாக, மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

பொதுமக்களே எஜமானா்கள்; பொதுமக்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அவா்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனா். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு, தமிழக மக்களின் வளா்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments