FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

சொத்து தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

வலங்கைமான் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் .

Updated On : 29 ஜூலை 2026, 4:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வலங்கைமான் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் .

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியைச் சோ்ந்த கமால்பாட்ஷா மகன் உபயதுல்லா (40). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். உபயத்துல்லா ஆவூா் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவரது தம்பி அப்துல் லத்தீப் (36) மலேசியாவில் வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை அப்துல் லத்தீப் மலேசியாவிலிருந்து ஆவூா் வந்துள்ளாா். அண்ணன், தம்பி இடையே சொத்து பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் இதுதொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஆத்திரமடைந்த அப்துல் லத்தீப் மறைத்து வைத்திருந்த கத்தியால் உபயதுல்லாவை உடலின் பல பகுதிகளில் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த உபயதுல்லா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். வலங்கைமான் போலீஸாா் அப்துல் லத்தீப்பை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments