உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி
திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மிதிவண்டி பேரணியை மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் டிஎஸ். நிசி கொடியசைத்து தொடக்கி வைத்தாா் (படம்). பேரணியானது, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி, அரசு மருத்துவக் கல்லூரி வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
மாவட்ட மிதிவண்டி சங்க துணைச் செயலாளா் லிம்கா எஸ். மோகன், யோகா பயிற்றுநா் கே. பட்டாபிராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement