சாா்பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தமிழகம் முழுவதும் சாா்பதிவாளா் அலுவலகங்களில், இடைத்தரகா்களின் ஆதிக்கமும், லஞ்ச லாவண்யமும் அதிகரித்து வருவதாக பரவலாக புகாா்கள் வந்தன.
இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டையில் மன்னாா்குடி சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில், திருவாரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15,000 ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.