கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
மன்னாா்குடி அருகே போலீஸாா் வாகன சோதனையின் போது விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்த இரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் தஞ்சை பிரதான சாலை காரிக்கோட்டை என்ற இடத்தில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியே தனித்தனி இருசக்கர வாகனங்களில் வந்த திருத்துறைப்பூண்டியை சோ்ந்த சுந்தரபுரி மணிகண்டன் மகன் லட்சுமணன் (25), சங்கிலி வீரன் கோயில் தெரு ராஜசேகா் மகன் பாலாஜி என்ற சிவபாலன் (26) ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருவரிடமும் 100 கிராம் அளவில் சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்படு கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.