சாரதா நிதி நிறுவன மோசடி:ப.சிதம்பரம் மனைவிக்கு சிபிஐ அழைப்பாணை
மேற்கு வங்கத்தில் நடை பெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடை பெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி
அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
எனினும், இதுதொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, அழைப்பாணை எதுவும் நளினிக்கு அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 6-ஆவது துணை குற்றப்பத்திரிகையில் நளினியின் பெயரையும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.