2022-க்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி: மத்திய அரசு திட்டம்
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் உயரதிகாரி புதன்கிழமை தெரிவித்ததாவது: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு
புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 70 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிகழாண்டு மார்ச் 31-க்குள் 38 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு முடிவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி அளவு 1.08 லட்சம் மெகா வாட்டாக இருந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்திறன் அளவைவிட 2 மடங்கு அதிகரித்து தற்போது 70 ஜிகா வாட்டாக உள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்திறன் 2017-18-இல் 11,788 மெகா வாட் கூடுதலாக்கப்பட்டது.
ஒரே ஆண்டில் இதுதான் அதிகபட்ச கூடுதலாகும். 2017-18-இல் முதல் தடவையாக ஒரே ஆண்டில் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டது. அதேபோன்று, 22 ஜிகா வாட் சூரிய மின்சக்தி கொள்திறன் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது 2022-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்காக 2010-இல் நிர்ணயிக்கப்பட்டதாகும் . அதேபோன்று, கடந்த ஆண்டில் 56 ஆயிரம் சூரிய மின்சக்தி பம்புகள் நிறுவப்பட்டன. ஒரே ஆண்டில் இந்த அளவு எண்ணிக்கையில் இதற்கு முன்பு நிறுவப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.