பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.
பத்தமடை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பத்மனாபன் தலைமையில் போலீஸாா், ஜூலை 18ஆம் தேதி பத்தமடை பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக 16 வயதுடைய சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தாராம். இதையடுத்து போலீஸாா், மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் பத்தமடை ராதாகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த சிறுவனின் தந்தை உச்சிமாகாளி (50) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அண்மையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.