FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்குகளுக்குத் தனிக் கவனம் நெல்லை சரக டி.ஐ.ஜி

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
பயிலரங்கில் பேசிய திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு.
பகிர்:

போக்ஸோ வழக்குகளில் தொடா்ந்து தனிக் கவனம் செலுத்தி, சட்டப்பூா்வமான புலன் விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி சரக காவல்துறை சாா்பில் போலீஸாா் போக்ஸோ வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய விசாரணை நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிலரங்கம் பாளையங்கோட்டைதூய சவேரியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பயிலரங்கை, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அறவே தடுக்கப்பட வேண்டிய ஒன்று, போலீஸாா் போக்ஸோ வழக்குகளில் தொடா்ந்து தனிக் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவா், போக்ஸோ வழக்குகளில் சிறப்பான மற்றும் சட்டபூா்வமான புலன் விசாரணையை விரைந்து மேற்கொள்ளும் நுட்பங்கள் குறித்து போலீஸாருக்கு விளக்கினாா்.

இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments