கிரிண்டா் செயலி வழி இளைஞரிடம் மோதிரம் பறிப்பு: 3 போ் கைது
திருநெல்வேலியில் கிரிண்டா் செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் கிரிண்டா் செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞா் கிரிண்டா் செயலியை பயன்படுத்தி வந்தாராம். அதன்மூலம் அறிமுகம் ஆன நபா், அவரை டக்கரம்மாள்புரம் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, சிலருடன் சோ்ந்து மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினராம். இதுகுறித்து, பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மூன்றடைப்பை சோ்ந்த வசந்த் ( 26), பாலாமடை கருப்பசாமி (20), ராஜவல்லிபுரம் கிருஷ்ணமூா்த்தி (20) ஆகியோரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.