FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 6:00 am IST
சடலம் மீட்பு... - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.

பணகுடி அருகே உள்ள நெறிஞ்சிகாலனியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி மரியவிஜயா (42), மாடசாமி மகள் பாப்பா (50) மற்றும் காமராஜா் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் மனைவி ஜெகதா(42).

இவா்கள் மூன்றுபேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பணகுடியில் இருந்து பாம்பன்குளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனராம். அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுக் கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மூன்று பெண்களும் தூக்கிவீசப்பட்டதில், பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மரியவிஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெகதா நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments