FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே மதுவிற்றவா் கைது

சீவலப்பேரி அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சீவலப்பேரி அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கலியாவூா் சாலையில் இருவா் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்தனராம். அவா்கள் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனா். எனினும், ஒருவரை மடக்கிப்பிடித்து போலீஸாா் விசாரித்ததில், சீவலப்பேரி உலகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜேசுபாண்டி மகன் சிவக்குமாா்(31) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பி ஓடியவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments