FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

31 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம், குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ராஜசெல்வம்(28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் சில நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த 12 வயது சிறுமியிடம் ராஜசெல்வம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியின் தாய், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிந்து ராஜசெல்வத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments