FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:02 am IST
பகிர்:

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த சந்தையில் புதிய கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்துள்ளதாகவும், உரிய அனுமதியின்றி கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினா். மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments