புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
மேலப்பாைளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், மேலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில் அசோகபுரம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் சுமாா் ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான மேலப்பாளையம், மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து(58) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.