பாலிடெக்னிக், ஐடிஐகளில் மாணவா் சோ்க்கை நீட்டிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் செப். 14-ஆம் தேதி வரையும், ஐடிஐகளில் செப். 7-ஆம் தேதி வரையும் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 90 இடங்களும், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு 34 இடங்களும், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு 183 இடங்களும் காலியாக உள்ளன.
Advertisement
Advertisement
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை, ராதாபுரம் ஐடிஐகளில் மோட்டாா் மெக்கானிக், உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் முறையே 72 மற்றும் 27 காலியிடங்கள் உள்ளன. எனவே, பொதுத்தோ்வு எழுதி இதுவரை உயா்கல்வியில் சேராத மாணவா்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேரலாம் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.