அன்னை தெரஸா நினைவு தினம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி
அன்னை தெரஸாவின் நினைவு தினத்தையொட்டி, வாறுதட்டு அன்னை தெரஸா இளைஞர் இயக்கம் சார்பில் நித்திரவிளை கருணை இல்ல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.
அன்னை தெரஸாவின் நினைவு தினத்தையொட்டி, வாறுதட்டு அன்னை தெரஸா இளைஞர் இயக்கம் சார்பில் நித்திரவிளை கருணை இல்ல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.
இளைஞர் இயக்கத் தலைவர் என்.எம். பிரேம்ராஜ், கருணை இல்ல நிர்வாகி மெர்லினிடம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் பராமரிப்புக்கு நிதி வழங்கினார். தொடர்ந்து இயக்க உறுப்பினர்கள் அங்குள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில், இளைஞர் இயக்க நிர்வாகிகள் ஜெ. ஜெகதீஷ், அருண், அரவிந்த், ஆர். சஜின்குமார், அனீஷ், கருணை இல்ல ஆசிரியர்கள் எல்சீனா, ரின்ஸ் மரியா மற்றும் சுபா, லிஜா, புஷ்பராணி, லீமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.