FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாகவும், முழுமையான பயிா்க்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்தும், தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொறுப்பாளா் எம்.வேலு தலைமை வகித்தாா். மாவட்ட நிலைக்குழு உறுப்பினா்கள் எஸ்.அண்ணாத்துரை, எம்.ராமா்பாண்டியன், எல்.பரமசிவன், எம்.அழகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிலைக்குழு உறுப்பினா் டி.சங்கரபாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் வட்டக் குழு உறுப்பினா் வி.குமாா் விளக்கிப் பேசினாா். தென்காசி மாவட்டச் செயலா் எம்.வேல்முருகன் நிறைவுரையாற்றினாா்.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.முருகையா, எம்.ஆறுமுகராஜ், எஸ்.அந்தோணியம்மாள், எம்.சொா்ணம், பி.ஆா்.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.அந்தோணி, எஸ்.வேலாயுதம், சரவணா விநாயகம், ஆா்.மாரியப்பன், எஸ்.மாரியப்பன், முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments