FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசையில் பெண் தற்கொலை: கணவா் கைது

குத்துக்கல்வலசையில் பெண்தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

குத்துக்கல்வலசையில் பெண்தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குத்துக்கல்வலசை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா். பத்திர எழுத்தா். இவரது மனைவி பிரியா(30). இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ராம்குமாா் வெளியே சென்றிந்தபோது, பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

இத்தகவலறிந்த தென்காசி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக, ராம்குமாரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments