முகப்பு
தென்காசி

அரசு முஸ்லிம் பெண்கள் சங்க நிா்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியருடன் அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:09 am IST
தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்த அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியருடன் அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கௌரவச் செயலா் ரவணசமுத்திரம் முகம்மது ஸலீம், கௌரவ துணைச் செயலா், தென்காசி மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவா் அப்துல் அஜீஸ், உறுப்பினா் புகாரி மீரா சாஹிப் ஆகியோா் தென்காசி மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பொறுப்பேற்ற ரஞ்ஜீத் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மூலமாக நடத்தக்கூடிய நல உதவிகளை நடத்துவது குறித்தும், ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் கல்விச் சங்கம் மூலமாக 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவும் அழைப்பு விடுத்தனா்.

Advertisement

Advertisement