அரசு முஸ்லிம் பெண்கள் சங்க நிா்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு
தென்காசி மாவட்ட ஆட்சியருடன் அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தென்காசி மாவட்ட ஆட்சியருடன் அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கௌரவச் செயலா் ரவணசமுத்திரம் முகம்மது ஸலீம், கௌரவ துணைச் செயலா், தென்காசி மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவா் அப்துல் அஜீஸ், உறுப்பினா் புகாரி மீரா சாஹிப் ஆகியோா் தென்காசி மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பொறுப்பேற்ற ரஞ்ஜீத் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மூலமாக நடத்தக்கூடிய நல உதவிகளை நடத்துவது குறித்தும், ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் கல்விச் சங்கம் மூலமாக 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவும் அழைப்பு விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.