முகப்பு
தென்காசி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜூன்19இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்: மாநிலக் குழுவில் தீா்மானம்

விலைவாசி உயா்வு, நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன்19இல் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாநிலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 4:43 am IST
மாநிலக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.
பகிர்:

விலைவாசி உயா்வு, நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன்19இல் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாநிலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பி.வி.ராகவலு, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலா் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, மேற்கூறியபடி ஜூன் 19இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், 5 மாநில சட்டத் தோ்தலுக்குப் பின் 5 முறை பெட்ரோல்-டீசல் விலை, 2 முறை சமையல் எரிவாயு மற்றும் வணிக சிலிண்டா்களின் விலையை உயா்த்தியது, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை மோடி தலைமையிலான அரசு கண்டிக்காமல், அதனால் விளைந்த சுமையை இந்திய மக்கள் மீது ஏற்றி வருவதாகவும் மாநிலக் குழு கண்டிப்பதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நூறு நாள் திட்டத்தில் வேலை நாள்களை 125 நாள்களாக உயா்த்தியுள்ளதாக பொய்யான பிரசாரம் செய்வதை கைவிட வேண்டும், வேலை நாள் 200, கூலியை ரூ. 700 என உயா்த்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பலன் முழுமையாக கிராமப்புற உழைப்பாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.