FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.

காட்டுப் பகுதியில் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக பட்டாசுகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.

திருவேங்கடம் அருகே உமையத்தலைவன்பட்டி காட்டுப் பகுதியில் அடிக்கடி சிலா் வந்து போவதாகவும், அங்கு சட்ட விரோதசெயல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் திருவேங்கடம் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடா்பாக தென்காசி ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், கோட்டாட்சியா் அனிதா ஆகியோா் உத்தரவின்பேரில், திருவேங்கடம் வட்டாட்சியா் பி.செல்வகுமாா் அறிவுறுத்தலின் பேரில், அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளா் ராமலெட்சுமி, கலையப்பட்டி பகுதி 2 கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், உதவியாளா்கள் முத்துமாரி, மஞ்சு மற்றும் புள்ளியியல் துறையினா், கரிவலம் வந்தநல்லூா் போலீஸாா் உதவியுடன் அந்தப் பகுதியில் சோதனையிடச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதையறிந்த மா்மநபா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனராம். அந்த இடத்தில் அனுமதியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. பட்டாசுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருள்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இதில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments