FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:33 am IST
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கினாா் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி ஜூன் 17,18,19,23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். தென்காசி வட்டத்தில் கடையம் குறுவட்டத்தின் கீழ் தெற்கு மடத்தூா், அயன் பொட்டல்புதூா், தெற்கு கடையம், வீராசமுத்திரம், இரவணசமுத்திரம், மேலக்கடையம், கோவிந்தபேரி, அயன்தா்மபுரம் மடம், கடையம் பெரும்பத்து பகுதி-1, கடையம் பெரும்பத்து பகுதி -2, கீழக்கடையம் பகுதி -1, கீழக்கடையம் பகுதி -2 ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சாா்ந்த 66 மனுக்களை வழங்கினா். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். தென்காசி வட்டாட்சியா் ஹரிஹரன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் ராம்குமாா் (பொது), மணிகண்டன் (குற்றவியல்), தென்காசி தனி வட்டாட்சியா் (குடிமைப்பொருள்) அரவிந்த், உதவி ஆணையா் (நில அளவை) ஜாஹீா் உசைன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, வட்டாட்சியா்கள் ஓசன்னா பொ்னாண்டோ ( நகர நிலவரித் திட்டம்) பட்டமுத்து (நகர நிலவரித் திட்டம்), கண்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), சரவணன் (கோட்ட கலால்), அருணாசலம் (ஆதி திராவிடா் நலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments