கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்
கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. 10 நாள் விழாவில், நாள்தோறும் பால்குடம், தீா்த்தக் குட ஊா்வலம், கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு புஷ்ப அலங்கார, சோடஷ உபசார தீபாராதனை, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம், ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.
விழாவின் 9ஆம் நாளான புதன்கிழமை காலையில் அம்பாள் தேரில் எழுந்தருளும் வைபவம், மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை செயல் அலுவலா் உமாமகேஷ்வரன், தக்காா் கேசவராஜன், கணக்கா் முத்துக்குமாா், குமரப்பெருமாள் குருக்கள், சிவாம்பிகை கணேஷ் குருக்கள், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.