பள்ளியில் இலக்கியக் கழக விழா
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இலக்கியக் கழக ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இலக்கியக் கழக ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி உதவித் தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார். தமிழாசிரியை கல்யாணி வரவேற்றார். பேச்சு, கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அருணாசலம் சிறப்புரையாற்றினார். உதவித் தலைமையாசிரியர் தங்கம், ஆசிரியர் கந்தமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.