பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில், கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில் 1,144 ஆவது தொடர் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில், கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில் 1,144 ஆவது தொடர் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.
சங்கத் தலைவர் கு. சடகோபன் தலைமை வகித்தார். பேராசிரியர் பா. வளன்அரசு முன்னிலை வகித்தார். கி. பிரபா கிருட்டிணன் இறைவாழ்த்து பாடினார். சங்கத்தின் இணைச் செயலர் இரா. முருகனும், பேராசிரியர் தி. முகுந்தனும் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வாழ்த்திப் பேசினார். நிலா இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ந. ராசகோபால், புலவர் வை. ராமசாமி, சண்முகையா, ஆசிரியர் பா. முருகன், கோதைமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பி. ஆவுடையப்பன் வரவேற்றார். பொருளாளர் மு.அ. நசீர் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.